டாக்டர். M A N லோகநாதன் MBBS பட்டப்படிப்பை கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்றவர். கோவையில் GKNM உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர். தேசிய நுழைவுத்தேர்வில் வென்று ஹூப்ளியில் உள்ள KIMS அரசுக் கல்லூரியில் MS ORTHO மேற்படிப்பு படித்தவர்.தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்தவர். 1999 முதல் எலும்பு முறிவு சிகிச்சையை நமது பகுதியில் சிறப்பாகச் செய்து வருகிறார். 20 வருட அனுபவம். ஏராளமான சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தவர்.
பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தின் வலிகளை சரியாக்கிப் பழைய வாழ்வைத் திருப்பியளித்தவர்.
பல மருத்துவமனைகளுக்கும் எலும்பு முறிவு கன்சல்டண்ட் ஆக விளங்குபவர். பல எலும்பு முறிவு மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகச் சென்று தன் அனுபவங்களை இளையோர்க்குப் பகிர்ந்தளிக்கிறார். எலும்பு முறிவு மருத்துவம் மட்டுமின்றி முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சைகளை நமது பகுதியில் பிரபலப்படுத்தியவர். பல மூட்டுமாற்று அறுவை சிகிச்சைகளை மூலம் பலநூறு வயதான பெருமக்களை வலியின்றி நடக்க வைத்திருக்கிறார். நுண்துளை அறுவை சிகிச்சைகள் மூலம் பலரையும் விரைவாகப் பணிக்குத் திரும்பச் செய்தவர்.
Dr M A N லோகநாதன் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு 1999 ல் சிறு க்ளினிக்காகத் தொடங்கப்பட்டது. பவானி கார்த்திக் மருத்துவமனையில் தெய்வத்திரு Dr. நற்றமிழ் அரசு Dr. மேனகா அவர்களின் ஆதரவில் சில காலம் செயல்பட்டது.
பிறகு திரு. K. C. சுப்ரமணியம் அவர்களின் லோட்டஸ் மெடிக்கல்ஸ் கட்டிடத்தில் பத்துப் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தொடர்ந்தது.
அதன்பின் பழைய சவுத் இண்டியன் வங்கிக் கட்டிடத்தில் இருபது படுக்கைகள் மற்றும் இரண்டு ஆபரேஷன் தியேட்டர்களுடன் அடுத்த கட்டத்தை அடைந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு புதிய ஐம்பது படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனையாக மாறியது.
தலைசிறந்த ஆசிரியர்களும் கைதேர்ந்த மருத்துவர்களும் நம் மருத்துவமனையைத் துவக்கி வைக்க ஒரு புதிய பயணம் துவங்கியது. இன்று நான்கு ஆபரேஷன் தியேட்டர்கள் பல சிறப்புச் சிகிச்சைப்பிரிவுகள் என பவானியின் தனிச்சிறப்பு மிக்க மருத்துவமனையாக நம் ஹாஸ்பிட்டல் திகழ்கிறது.
மேலும் படிக்கமருத்துவம் எலும்பு முறிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதுகுத்தண்டுவட சிகிச்சை ஆர்த்ரோஸ்கோப்பி பொது அறுவை சிகிச்சை மகப்பேறு மருத்துவம் குழந்தைகள் மருத்துவம் பல் மருத்துவம் பிளாஸ்டிக் சர்ஜரி காது மூக்கு தொண்டை மருத்துவம் கண் மருத்துவம் சர்க்கரை நோய் சிகிச்சை என்பது போன்ற மருத்துவத்தின் பல துறைகளிலும் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
உடனுக்குடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் பதில் தருவார்கள். அதிக பட்சம் 24 மணி நேரத்தில் உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும்.
உங்கள் பெயர், வயது, ஊர், செல்போன் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு கேள்விகள் அனுப்பவும். வாய்ஸ் மேசேஜ் மூலமாகவும் அனுப்பலாம். எக்ஸ்ரே படங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.
சிறந்த கேள்விகள் எங்களது இணைய தளத்திலும், மருத்துவமனையின் பேஸ்புக் பக்கத்திலும் பிரசுரக்கப்படும். இது ஒரு கட்டணமில்லாச் சேவையாகும்.
ஆன்லைன் ஆலோசனைக்கு அழைக்கவும் 9842720444
நமது உடம்பில் 206 எலும்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு எலும்பும் உறுதியானது. வலுவானது.ஆனால் எலும்புகள் ஒரு குறிப்பிட்ட அளவு எடையையும் விசையையும் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகப்படியான எடை அல்லது விசை அந்த எலும்பைத் தாக்குகின்ற பொழுது அந்த எலும்பு வளைந்து ஒரு கட்டத்திற்கு மேல் உடைந்து விடுகிறது. இதைத்தான் நாம் எலும்பு முறிவு அல்லது பிராக்சர் என்று கூறுகிறோம்.
முதுகு தண்டுவட எலும்புகள் உடலுக்கு வடிவத்தை தருகின்றன.உயரத்தை தருகின்றன.நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. குனிய ,திரும்ப ,உட்கார உதவி செய்கின்றன.மூளையிலிருந்து நரம்புத் தண்டு முதுகெலும்புத் தொடரில் உட்பக்கமாகவே கீழே செல்கிறது.நரம்புகளின் பாதுகாப்புக்காக எலும்புகளால் ஆன பெட்டகம் தான் முதுகெலும்புத் தொடர் ஆகும்.
மனித முழங்கால் மூட்டுக்கள் வலுவானவை. நிற்க, நடக்க, உட்கார,குந்த வைக்க, சம்மணங்கால் போட, குதிக்க, நீந்த, தாவ என அத்தனை உடலியல் செயல்களுக்கும் இவை இன்றியமையாதவை. ஆனால் அவை தாங்கும் எடையும், வேலை செய்யும் நேரமும் அதிகமாகும் பொழுது அவை தேய ஆரம்பிக்கின்றன.
ஆர்த்ரோஸ்கோப் என்பது மூட்டுகளை ஆராய உதவும் துளைக்கருவி.சிறுதுளைகள் மூலம் மூட்டுகளில் உள்ளே ஒரு கேமராவையும் ஒளிதரும் கருவியையும் செலுத்தி மூட்டின் உட்பகுதியை ஆராய முடிகிறது. சிறு பகுதி கூட உருப்பெருக்கம் செய்து உற்று நோக்க முடிகிறது,இதனால் மூட்டில் உள்ளே ஏற்படும் சிறுசிறு காயங்களையும் வலிகளையும் சரிவர அறிந்து கொள்ளவும் அவற்றை சரி செய்யவும் முடிகிறது.
அடிபட்டு சிதைந்த உடலின் பாகங்களை நமது உடலின் திசுக்களை கொண்டே சரி செய்து காயங்களை ஆற்றி பழைய நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்துவது பிளாஸ்டிக் சர்ஜரியின் இலக்கு ஆகும்.தொழிற்சாலை விபத்துகளில் ,சாலை விபத்துக்களில் விரல்கள் ,கைகள், கால்கள் ஆகியன பாதிக்க நேரிடுகிறது. தோல் ,சதை ,நரம்புகள் ,இரத்தக்குழாய்கள் சேதமடைகின்றன. கைகள் கால்களின் அமைப்பு சிதைகிறது. வேலை தடைபடுகிறது. அழகு கெடுகிறது.இதனை சரியான நேரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்கிறோம்.
சாலைவிபத்துகளில் முகத்தில் அடிபடுவதால் பற்கள் உடைகின்றன. தாடை எலும்பு முறிவு ஏற்படுகிறது. சாப்பிட முடிவதில்லை.பேச முடிவதில்லை.முகத்தின் வடிவம் மாறி விடுகிறது.இவற்றை சரிசெய்ய அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.முறிந்த எலும்புகளை சரிசெய்து மினி பிளேட் கொண்டு பொருத்தி முகத்தின் வடிவத்தை நம்மால் பழையபடி கொண்டு வர முடியும்.இதனை தழும்புகள் இல்லாமலேயே செய்யமுடியும்.
பொது அறுவை சிகிச்சைகளும் நமது மருத்துவமனையில் செய்யப்படுகின்றது அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் அழற்சிக்கான ஒட்டுக்குடலை அகற்றும் அறுவை சிகிச்சை நம்மால் செய்யப்படுகிறது.ஹெர்னியா என்னும் குடல் இறக்கத்தை சரிசெய்து மெஷ் என்று சொல்லப்படும் செயற்கை வலை கொண்டு மறுபடியும் குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளை இங்கு செய்கிறோம்.
மகப்பேறு மருத்துவ துறை டாக்டர் கோகிலவாணி சரவணன் அவர்களால் நமது மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.இதற்கு என்று பிரசவ அறை ,தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வசதிகள் ஆகியன உள்ளன.பல சுகப் பிரசவங்கள் ,சிசேரியன் மூலமாக நடைபெறும் பிரசவங்கள் ஆகியன இங்கு நிகழ்கின்றன.
Dr. M A N லோகநாதன் MS ortho
எலும்பு முறிவு , தண்டுவடம் மற்றும்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
Dr. ஜோதிகுமார் MS
பொது அறுவை சிகிச்சை நிபுணர்
Dr. ரமேஷ்
சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்
Dr. சரவணன்
குழந்தை மருத்துவர்
Dr. மகேஷ்வரன்
காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர்
Dr. கோகிலவாணி சரவணன்
மகளிர் நல மருத்துவர்
Dr. சுப்பிரமணியன்
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
Dr. மணிகண்டன்
பல் மருத்துவ நிபுணர்
Dr. மகேந்திரன்
பல் மருத்துவ நிபுணர்
Dr. கார்த்தி
மயக்கவியல் நிபுணர்
Dr. பிரதீபா
மயக்கவியல் நிபுணர்
திருமதி. ராஜேஸ்வரி லோகநாதன்
மருத்துவமனை தலைமை நிர்வாக இயக்குனர்
சதீஷ்குமார்
ஆலோசகர் மருத்துவ அதிகாரி
கிருஷ்ணமூர்த்தி
எக்ஸ் ரே நிபுணர்
சுமதி
மேலாளர்
பிரகாஷ்
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்
முத்து
இரத்தப்பரிசோதனை நிபுணர்
தினேஷ்
இன்ஷூரன்ஸ் ஒருங்கிணைப்பாளர்
கார்த்தி
பிஸியோதெரபி நிபுணர்
சரண்யா
வரவேற்பாளர்
மஞ்சு
ஆபரேஷன் தியேட்டர் சிஸ்டர்
சரவணன்
வரவேற்பு பொறுப்பாளர்
சந்தியா
உள்நோயாளிகள் பிரிவு பொறுப்பாளர்
ராஜி
வெளிநோயாளிகள் பிரிவு பொறுப்பாளர்
சங்கீதா
ஆபரேஷன் தியேட்டர் பொறுப்பாளர்
தில்லையப்பா
பாதுகாப்பு பொறுப்பாளர்
CHIEF MINISTER'S COMPREHENSIVE INSURANCE SCHEME
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் பயன் பெறும் புதிய காப்பீட்டுத் திட்டம் இங்கு உள்ளது.
TAMILNADU GOVERNMENT PENSIONERS SCHEME
தமிழக அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கான காப்பீட்டுத் திட்டமும் நமது மருத்துவமனையில் உள்ளது. மத்திய அரசின் தர நிர்ணய நிறுவனம் நமது மருத்துவமனையை ஆய்வு செய்து தேசிய தரச்சான்று அளித்துள்ளது!.
1. நவீன எலும்பு முறிவு மருத்துவம் நாட்டு வைத்தியத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?
அடிபட்ட இடத்தை எக்ஸ்ரே படம் எடுத்து எலும்பு முறிந்த விதம் அறிகிறோம். அதற்கேற்ப மாவுக்கட்டு போடுகிறோம் அல்லது அறுவை சிகிச்சை செய்கிறோம். உடைந்த எலும்பு சரியாகப் பொருந்தி உள்ளதா என மீண்டும் எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்கிறோம். உடைந்த பகுதியில் உள்ள மூட்டுகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கிறோம். எலும்பு வலுவாகத் தகுந்த மருந்து மாத்திரைகள் தருகிறோம். கூடி விட்டதா என்பதையும் அறிந்து நோயாளிகளை நடக்க வைக்கிறோம்.
இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயம். விழிப்புடன் அறிவுள்ள மாணவர்கள்தான் அடுத்த தலைமுறையை மிகச்சிறப்பாக உருவாக்குவார்கள். எனவே உடல் நலம் முதலுதவி மருத்துவ விழிப்புணர்வு குறித்து பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு அறிவூட்டும் விதமாக நம் மருத்துவமனை சார்பில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முதல் கட்டமாக பங்களாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு எலும்புமுறிவு மருத்துவ சங்கத்தின் சார்பாக நமது மருத்துவமனையில் பயிலரங்கம் நடந்தது.இதில் தமிழ்நாடு எலும்புமுறிவு மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு ரமேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டார்கள்.பவானியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
இப்போது தேசிய தரச்சான்று பெறுகிறோம்.
ஆம்...!
NABH என்னும் மத்திய அரசின் தர நிர்ணய நிறுவனம் நமது மருத்துவமனையை ஆய்வு செய்து தேசிய தரச்சான்று அளித்துள்ளது!