பள்ளி நிகழ்வுகள்

இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயம். விழிப்புடன் அறிவுள்ள மாணவர்கள்தான் அடுத்த தலைமுறையை மிகச்சிறப்பாக உருவாக்குவார்கள். எனவே உடல் நலம் முதலுதவி மருத்துவ விழிப்புணர்வு குறித்து பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு அறிவூட்டும் விதமாக நம் மருத்துவமனை சார்பில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முதல் கட்டமாக பங்களாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.

➤ பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் திரு. தாமோதரன் ஆகியோரின் உதவியுடன் இவ்விழா மிகச் சிறப்பாக நடந்தது. பள்ளி மாணவ மாணவியர் இவ்விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதலுதவி பற்றியும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட்டது .செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. மாணவ மாணவியருக்கு சாலை விபத்துக்கள், தீக்காயங்கள், வீட்டில் ஏற்படும் விபத்துக்கள், பாம்புக்கடி ஆகியவற்றுக்கான முதல் உதவி முறைகள் விளக்கமாக செய்து காட்டப்பட்டன.

➤ சி பி ஆர் என்னும் இதயத்தையும் நுரையீரலையும் மீட்டெடுக்கும் முதலுதவி சிகிச்சை முறைகள் மாணவ-மாணவியருக்கு விளக்கப்பட்டு செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

To follow/subscribe our Social Media pages